ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் சாந்தா தொடங்கி வைத்தார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் ராதா தலைமை தங்கினார்.

இதில், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பல்வேறு நிலைகளை மாணவர்கள் சமூக விழிப்புணர்வு மூலமாக இந்நிகழ்வில் நடத்தினர். அதில் நஷ்டா என்னும் காலை உணவுகள் குறித்தும், லைட்ஸ் அவுட் என்னும் வாகனத்தில் இரவு நேரங்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் தொலைதூர ஒளி ஆபத்து குறித்தும், ஓரம் போ என்னும் சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தவிர்த்தல், ஃபிட் ஓ ஃபிட் உடற்பயிற்சி, அழகு சாதனம் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள், உணவில் இருக்கும் கலப்படம், பணமதிப்பு இழப்பை குறைத்தல், சுற்றுசூழல் மாசு கட்டுப்படுத்துதல் போன்றவற்றை விளக்கும் வகையில் பல்வேறு சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் மாணவர்கள் தயாரித்தும் அதனை மற்ற மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலே குறிப்பிடப்பட்ட தலைப்புகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க விளையாட்டுக்கள் மற்றும் கடைகள் போன்றவற்றை ஜி.ஆர்.டி கல்லூரி மாணவர்கள் நிகழ்வின் ஒரு பகுதியில் இதனை நடத்தினர்.

இது குறித்து பேராசிரியர் மோகனசுதன் சிம்பிளிசிட்டி நிருபரிடம் பேசுகையில்; முதலாம் ஆண்டு காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் கற்பிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு திட்ட வேலைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இதனை சமூக பணிக்காக நடத்துவதற்க்காக திட்டமிடப்பட்டது. இந்த சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு அறிவுத்திறன் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது சமூக மாற்றத்தினை கொண்டுவருவதற்கும் உதவும் என்றார்.



இதில், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பல்வேறு நிலைகளை மாணவர்கள் சமூக விழிப்புணர்வு மூலமாக இந்நிகழ்வில் நடத்தினர். அதில் நஷ்டா என்னும் காலை உணவுகள் குறித்தும், லைட்ஸ் அவுட் என்னும் வாகனத்தில் இரவு நேரங்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் தொலைதூர ஒளி ஆபத்து குறித்தும், ஓரம் போ என்னும் சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தவிர்த்தல், ஃபிட் ஓ ஃபிட் உடற்பயிற்சி, அழகு சாதனம் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள், உணவில் இருக்கும் கலப்படம், பணமதிப்பு இழப்பை குறைத்தல், சுற்றுசூழல் மாசு கட்டுப்படுத்துதல் போன்றவற்றை விளக்கும் வகையில் பல்வேறு சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் மாணவர்கள் தயாரித்தும் அதனை மற்ற மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலே குறிப்பிடப்பட்ட தலைப்புகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க விளையாட்டுக்கள் மற்றும் கடைகள் போன்றவற்றை ஜி.ஆர்.டி கல்லூரி மாணவர்கள் நிகழ்வின் ஒரு பகுதியில் இதனை நடத்தினர்.

இது குறித்து பேராசிரியர் மோகனசுதன் சிம்பிளிசிட்டி நிருபரிடம் பேசுகையில்; முதலாம் ஆண்டு காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் கற்பிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு திட்ட வேலைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இதனை சமூக பணிக்காக நடத்துவதற்க்காக திட்டமிடப்பட்டது. இந்த சமூக விழிப்புணர்வு சார்ந்த சிந்தனை விளம்பர பிரச்சாரம் நிகழ்வுகள் காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு அறிவுத்திறன் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது சமூக மாற்றத்தினை கொண்டுவருவதற்கும் உதவும் என்றார்.

