சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில் ஏத்தாப்பூர் ரயில்நிலையத்தில் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை


இன்று (08.02.2017)  சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில்  பயணிகள் ரயில்களில் (ரயில் எண்.76847-சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், ரயில் எண்.76850 விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில், ரயில் எண் 56513- காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் மற்றும் ரயில் எண் 76849- விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில்) சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையில் 62 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 19,770 ரூபாய் பயணச்சீட்டுத் தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அது போல, 19 பேர் தகுந்த புக்கிங் இல்லாமல் சுமைகளை ஏற்றிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 3,170 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையை சேலம் கோட்ட துணை வணிகவியல் மேலாளர் எம். ஷாஜஹான் தலைமையிலான 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள், 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீர்ர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேலும் பல இடங்களில் செய்யப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...