குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்ததால், ஹோட்டல்களுக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள்..!

கோவையில் செயல்படும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்த நிலையில், தொழில்நுட்ப பணியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தகவல்.


கோவை: தொழில் நகரமான கோவை ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பம்ப்செட், வார்படம், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவையில் 1.5 லட்சம் பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கோவையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பம்ப்செட், வார்படம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் நிலவும் மந்த நிலை காரணமாக கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்நுட்ப பணியாளர்கள் கூட ஹோட்டல் தொழிலாளர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறியதாவது, பருவமழை, உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் தொழில் முனைவோர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஜனவரிக்கு பின் நிலைமை சீரடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இதேபோல், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மீண்டும் ஜிஎஸ்டி மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பணி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாடு தான் கொண்டுள்ளன.

நாங்கள் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியும் பலனில்லை. 30 குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் 5 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பெயரளவுக்கு செயல்படுகின்றன. பிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

இதனால் நிலைமை சீரடையும் வரை ஹோட்டல் உள்ளிட்ட சேவை துறையின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற சென்று கொண்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மிகவும் ஆபத்து.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...