அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்: கோவை மாவட்ட திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் வடகோவை திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.



கோவை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை திமுகவினர், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் கோவை மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கடந்த 3 ஆண்டுகளாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...