திருப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் - 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிடித்த போலீசார்..!

பல்லடம் அருகே 2 இடங்களில் வீடுபுகுந்து 19 சவரன் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பலை 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் (58). இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதேபோல் நவம்பர் மாதம் எலவந்தி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (62) என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து 7 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த இரண்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீடு மற்றும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளையர்களை சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்த போலீசார் பல்லடம், திருப்பூர், கரூர் என 300 சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கேத்தனூர் அருகே 3 பேரும் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குழந்தைவேல் உள்ளிட்ட போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த 16.5 சவரன் நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாலசங்கர்(40), தேனி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் (39), மற்றும் 16 வயது சிறுவன் ஒருவனும் அதில் இருப்பதும் தெரியவந்தது,

இந்த கொள்ளை கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...