கோவை டூ நேபால் விழிப்புணர்வு பயணம் - பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க இரு சக்கர பிரச்சார பயணம்

6 இரு சக்கர வாகனங்களில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த 7000 கி.மீ பிரச்சார பயணமானது, கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைய உள்ளது.



கோவை: பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் செக்கியூரிட்டி நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பயணமானது, 6 இரு சக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடையும். 14 நாட்கள் தொடரும் இந்த வாகன பிரச்சாரமானது, மொத்தம் 7000 கிமீ தூரத்தை கடந்து, செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தன்னார்வலர் மற்றும் சைபர் கிரைம் கன்சல்டன்ட் சங்கர் சுப்ரமணியன், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஃபோன் செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனடிப்படையில், விழிப்புணர்வு பதாகை மற்றும் துண்டு சீட்டு பிரசுரம் செய்து கோவையில் இருந்து நேபால் வரை பயணிக்க உள்ளோம். 7000 கி.மீ பயண வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு என்பது மிக முக்கியம். எந்தந்த செயலிகளை பயன்படுத்தக் கூடாது, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டு நபர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், தைரியமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தையும் பெண்களுக்கு எடுத்துக்கூற, இது போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகள் அவசியம் என்று போலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...