கோவையில் காய்கறிகளுடன் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்ட கிராம மக்கள் - நேரில் சென்று எஸ். பி விசாரணை - 4 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் காய்கறிகளுடன் ஊடுபயிராக பயிரிட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர், அங்குள்ள விவசாய நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில், பசுமணி கிராமத்தில், கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் பசுமணி கிராமத்துக்கு சென்று சோதனை செய்தனர்.



அப்போது, காய்கறிகளுடன் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சா செடிகளை பயிரிட்டது செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயிரிட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.



பின்னர், கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பசுமணி கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



மேலும், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது, விற்பது போன்ற சட்டத்துக்கு விரோதமான செயல்களை செய்வதினால் ஏற்படும் சட்ட விளைவுகளை குறித்தும் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயங்காது காவல்துறைக்கு - கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ். பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...