கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞருக்கு குவியும் பாராட்டு

கோவையை சேர்ந்த வன உயிரின புகைப்பட கலைஞர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு, அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



கோவை: கோவை தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு. வணிக தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், வன உயிரின புகைப்படங்கள் (Wildlife Photography) எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராவார்.



இதன் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு படங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மிகவும் அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக வன உயிரின புகைப்படங்களை எடுத்து வருகிறேன். கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வர்ணம் பூசப்பட்ட நாரை (பெய்ட்டட் ஸ்டார்க்) திக்கெல் நீல ஈப்பிடிப்பான் உள்ளிட்ட பல வன உயிரினங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன்.



சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் பென்ச் புலிகள் சரணாலய பகுதிக்கு சுற்றுலா சென்றோம். அங்கு மிகவும் அரிதாக பார்வைக்கு தட்டுப்படும் கருஞ்சிறுத்தை ஒன்றை கண்டோம். உடனடியாக எனது கேமராவில் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தேன்.



சில நொடிகள் மட்டுமே காண கிடைத்தாலும் அதை மிக அருகில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...