கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞருக்கு குவியும் பாராட்டு

கோவையை சேர்ந்த வன உயிரின புகைப்பட கலைஞர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு, அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



கோவை: கோவை தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு. வணிக தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், வன உயிரின புகைப்படங்கள் (Wildlife Photography) எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராவார்.



இதன் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு படங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மிகவும் அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக வன உயிரின புகைப்படங்களை எடுத்து வருகிறேன். கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வர்ணம் பூசப்பட்ட நாரை (பெய்ட்டட் ஸ்டார்க்) திக்கெல் நீல ஈப்பிடிப்பான் உள்ளிட்ட பல வன உயிரினங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன்.



சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் பென்ச் புலிகள் சரணாலய பகுதிக்கு சுற்றுலா சென்றோம். அங்கு மிகவும் அரிதாக பார்வைக்கு தட்டுப்படும் கருஞ்சிறுத்தை ஒன்றை கண்டோம். உடனடியாக எனது கேமராவில் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தேன்.



சில நொடிகள் மட்டுமே காண கிடைத்தாலும் அதை மிக அருகில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...