கோவையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜை - மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்

கோவை கடலைகாரசந்து பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை கடலைகாரசந்து பகுதியில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டிடத்திற்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்றது.

மத்திய அரசின் "தீன்தயால் அந்தயோத்திய யோஜனா" தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கான தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியின் 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட கடலைகாரர் சந்து பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது.

மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரத்துறை குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...