கோவை கணபதி அருகே முறையாக ஊதியம் வழங்காத காண்டிராக்டரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

கணபதி அருகே முறையாக ஊதியம் தராத காண்டிராக்டர் நந்தகோபாலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், துணை ஆணையர் இன்றே காசோலை வழங்கப்படும் என உறுதி அளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் காண்டிராக்டர்கள் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நந்தகோபால் என்ற காண்டிராக்டர், தூய்மை பணியாளர்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.



இதனை கண்டித்து, கோவை மாவட்டம் கணபதி பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு முன்பு தூய்மை பணியாளர் நலக்குழு மற்றும் ஏ.ஐ.சி.டி.யு சங்கத்தினருடன் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தை தொடர்ந்து, வடக்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், தூய்மை பணியாளர்களுக்கு இன்றைய தினமே காசோலை வழங்கப்படும் என்றும், வரும் திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...