சென்னையில் குண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் - கோவையை சேர்ந்த நபர் கைது..!

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொப்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுக்கடையில் இலவசமாக மதுபாட்டில் தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னையில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அழைப்பு விடுத்த நபரின் எண்ணை ஆய்வு செய்த போது, கோவையில் இருந்து அழைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை குனியமுத்தூர் போலீஸார் பீர்முகமதுவை கைது செய்து நடத்திய விசாரணையில் இவர் வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே டாஸ்மாக் கடையில் இலவசமாக மது பாட்டில் கொடுக்காத கோபத்தில் தான் வெடி குண்டு வைத்தாக மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...