கோவை தடாகம் அருகே உலா வரும் யானை, காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்..!

தடாகம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மற்றும் காட்டெருமைகள் மாங்கரை குடியிருப்புக்கு அருகே உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ஆடு மாடு மேய்ச்சலுக்காக செல்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை ஆனைக்கட்டி, தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மற்றும் மலைவாழ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தடாகம் பள்ளத்தாக்கு 24 வீரபாண்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட மாங்கரை பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடை மற்றும் ஆறுகளுக்கு யானை, காட்டெருமைகள் படையெடுத்து உள்ளன.



இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், தற்போது மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால், பொதுவாகவே அனைத்து பகுதிகளிலும் மூடுபனி அதிகமாக உள்ளது. குறிப்பாக தடாகம் சாலையானது மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான மூடுபனி காணப்படுகிறது.

யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முகப்பு விளக்குகளை எரியவிட்டு, கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...