கோவையில் வேளாண் வளர்ச்சி திட்ட விளக்கச் சிறப்பு பிரச்சார ஊர்திகளை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்

ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விளக்க சிறப்பு பிரச்சார ஊர்திகளை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவான கிராமத்தை உருவாக்கும் நோக்கில், கடந்த மே மாதம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.



கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல். மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தல், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்குதல். பாசன நீர் வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த வாகனங்களில் சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விளைவிக்கும் பொழுது அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விளக்க பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணவேணி, பெருமாள் சாமி, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...