தொடரும் வறட்சியும், விவசாயிகள் மரணமும்- நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள் ?


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து பல லட்சம் விவசாய நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

மேலும், குடிநீருக்குக்கூட தற்போது பஞ்சம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் சிறமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வறட்சியினால் விவசாயம் பொய்த்துப்போனதால் தற்போது வரை தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மன வேதனையில் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாய சங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தாலும் தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து முழுத்தீர்வினை எட்டவில்லை.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெரிஞ்சிபேட்டை என்னும் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பிலான பருத்தி செடி வறட்சியின் காரணமாக காய்ந்து போனதை கண்டு மனவேதனையில் ராஜேந்திரன் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியினையும்  ஏற்படுத்தியுள்ளது. இனியும் வறட்சியின் காரணத்தால் விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...