பீளமேடு அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி அருந்ததியர் இன மக்கள், விசாகா ஸ்டீல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு, தங்களுக்கு வீடு மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை கட்டித்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த ஏடி காலனியில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு தங்களுக்கு வீடு மற்றும் கழிவறைகளை கட்டி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அருந்ததியர் இன மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான இடத்தை விசாகா ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். வீடில்லா அருந்ததியர் இன மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, PSG மருத்துவமனையின் மன்றம் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு அங்கு போர்க்கால அடிப்படையில் பொது கழிவறை அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததியர் இன மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...