அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும் தென் கொரிய ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும், தென் கொரியாவில் செயல்பட்டு வரும் ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது வரும் 5 வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, பயிற்சிக்காக மாணவர்கள் பரிமாற்றம், சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுக்காக திட்டங்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஆகும்.

ஜிஜு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பயோ டெக்னாலஜி பேராசிரியரும், தேசிய முதன்மை ஆலோசகருமான முனைவர் மின்தேசன் இந்திய மாணவியரின் பயோ டெக்னாலஜி துறையில் வளர்ச்சியை கண்டறிந்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளார். 

அவர் ஆலோசகராக இருந்த காலத்தில் கொரியாவில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு உதவியுள்ளார். 

அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜினோமிக்ஸ், மெட்டாபோலோமிக்ஸ் மற்றும் மருத்துவ குணமுள்ள தாவரங்களின் பன்புகளைக் குறித்து குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை பெற இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பல்கலை கழகத்தின் பதிவாளராக உள்ள எஸ்.கவுசல்யா இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பயனடைந்தவர் ஆவார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று மாணவிகள் கல்வி உதவித் தொகையுடன் ஜின்செங் குறித்து ஆராய்ச்சி செய்ய தேர்வாகியுள்ளனர். 6 முதுகலை மாணவிகளும், 2 ஆராய்ச்சி மாணவிகளும் தங்களுடைய ஆராய்ச்சியினை கொரியாவில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள அவர்களுக்கு முழு உதவிகளும் வழங்கப்படும்.

விலங்கியியல் பயோ டெக்னாலஜி, நியூட்ரிஜீனோமிக்ஸ், ப்ளேன்ட் ஜீனோமிக்ஸ் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆசிரியர்களும், மாணவிகளும் இணைந்து பணியாற்றுவர்.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளங்கலை படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கொரியாவில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...