கோவை வேடப்பட்டி காரில் குட்கா கடத்தல் - ராஜஸ்தான் மாநில இளைஞர் கைது - 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…!

வேடப்பட்டி அருகே வடவள்ளி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த கோபல்குமார் என்பவர் காரில் 100 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வடவள்ளி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வீரகேரளம் - வேடப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வீரகேரளம் பேருந்து நிறுத்தம் வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது, உள்ளே குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார் (24) என்பதும், இவர் கோவையில் தங்கி மொத்தமாக குட்கா பொருட்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



பின்னர், கோபால் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...