ஒரே நாடு, ஒரே ரேஷன் போல, ஒரே சுடுகாடு என்பதை கொண்டு வர வலியுறுத்தி கோவையில் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அன்னூர் அருகே பொது சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசாம் பாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரங்கம்மாள். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 13ம் தேதி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை அங்குள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, அங்குள்ள சில நபர்கள் ஜாதியை குறிப்பிட்டு தடுத்து நிறுத்தி அங்கு அடக்கம் செய்ய கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அரசு அலுவலர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.



இந்நிலையில் ஜாதியை குறிப்பிட்டு உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தலித் விடுதலை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் என கூறி வரும் மத்திய அரசு ஒரே சுடுகாடு என்ற நிலையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும், இதில் இணை பொதுச் செயலாளர்கள் விடுதலை செல்வன், சகுந்தலா தங்கராஜ் உட்பட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...