ரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கையாக வாளையார் - மாவுத்தம்பதி இடையே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்

கோவை அருகே ரயிலில் சிக்கி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக ரயில்வே துறை சார்பில் வாளையார் - மாவுத்தம்பதி இடையே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்கள் தமிழக கேரள எல்லை வனப்பகுதியான வாளையார், மாவுத்தம்பதி, எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வனத்துக்குள் கடந்து செல்ல வேண்டும்.

அந்த வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான காட்டு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டுப் பகுதியில் உள்ள யானைகள் வாளையாருக்கும், மாவுத்தம்பதிக்கும் இடையே உள்ள ரயில் பாதையை தொடர்ந்து கடந்து செல்லும் போது, அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட அதே ரயில் பாதையில் தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தொடர்ந்து வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் இது குறித்து முறையிட்டு வந்த நிலையில், அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க அங்கு பாலம் அமைக்க முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது வாளையாருக்கும் மாவுத்தம்பதிக்கும் இடையே பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று வனத்துக்குள் ரயில் பயணிக்கின்ற இடங்களில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட விபத்து தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என வன உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன விலங்குகள் ரயிலில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், ரயில்வே துறையினர் பாலம் அமைத்து வருவதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...