நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் அருகே இன்று திடீரென நுழைந்த காட்டு எருமை அப்பகுதியை சுற்றி வலம் வந்தது.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த புற்கள் மற்றும் குப்பைகளை உண்ட காட்டெருமை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வனவர் சவுந்தராஜன், பாபு, காவல் துறையை சேர்ந்த ரவி ஆகியோர் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.
நீலகிரி வனப் பகுதியில் மழை பொய்த்துப்போய் வறட்சி நிலவிவருவதால் நீர், உணவு உள்ளிட்டவற்றைத் தேடி தற்போது அதிகளவிலான காட்டெருமை, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
மேலும், தற்போது கோடை காலமும் துவங்கவுள்ள நிலையில் அதிகளவிலான காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம் எனவும், இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் எனவும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகளுக்கு தகுந்த நீராதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த புற்கள் மற்றும் குப்பைகளை உண்ட காட்டெருமை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வனவர் சவுந்தராஜன், பாபு, காவல் துறையை சேர்ந்த ரவி ஆகியோர் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.
நீலகிரி வனப் பகுதியில் மழை பொய்த்துப்போய் வறட்சி நிலவிவருவதால் நீர், உணவு உள்ளிட்டவற்றைத் தேடி தற்போது அதிகளவிலான காட்டெருமை, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
மேலும், தற்போது கோடை காலமும் துவங்கவுள்ள நிலையில் அதிகளவிலான காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம் எனவும், இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் எனவும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகளுக்கு தகுந்த நீராதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.