குன்னூர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு எருமையால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் அருகே இன்று திடீரென நுழைந்த காட்டு எருமை அப்பகுதியை சுற்றி வலம் வந்தது. 



தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த புற்கள் மற்றும் குப்பைகளை உண்ட காட்டெருமை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வனவர் சவுந்தராஜன், பாபு, காவல் துறையை சேர்ந்த ரவி ஆகியோர் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

நீலகிரி வனப் பகுதியில் மழை பொய்த்துப்போய் வறட்சி நிலவிவருவதால் நீர், உணவு உள்ளிட்டவற்றைத் தேடி தற்போது அதிகளவிலான காட்டெருமை, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 

மேலும், தற்போது கோடை காலமும் துவங்கவுள்ள நிலையில் அதிகளவிலான காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம் எனவும், இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் எனவும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகளுக்கு தகுந்த நீராதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...