கோவை நவக்கரை அருகே விபத்து: கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் பலி..!

கேரளா மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த முகமது நாசில் (19) என்ற நர்சிங் மாணவர், நேற்று கோவைக்கு அவரது நண்பருடன் வந்து விட்டு, பைக்கில் மீண்டும் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அருகே கார் மீது மோதியதில் உயிரிழந்தார்.


கோவை: கோவை நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த வீரான்குட்டி என்பவரது மகன் முகமது நாசில் (19). இவர் பெங்கலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த முகமது நாசில் தனது நண்பரான முகமது பஜாஸ் (19) என்பருடன் தனது இரு சக்கர வாகனத்தில் கேரளாவில் இருந்து நேற்று கோவை வந்துள்ளார்.

பின்னர், மீண்டும் இருவரும் மாலை இரு சக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அடுத்த நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் காரின் பின் பகுதியில் பலமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட, முகமது நாசில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



படுகாயமடைந்த பஜாஸ், சுந்தராபுரம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...