கோவையில் உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்ற இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவு

உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் மெட்டாபேட்டமைன் (Methamphetamine) என்னும் உயர்ரக போதை பொருளை விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல, அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சின்ன தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிஷோர் அகமது மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி, காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவுவின், அடிப்படையில் போதை பொருள் விற்பனை குற்றவாளிகளான கிஷோர் அகமது (33) மற்றும் கஞ்சா வழக்கு குற்றவாளியான சுரேஷ்குமார் (33) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நடப்பாண்டில் போதை பொருள்கள் (கஞ்சா, Methamphetamine) விற்பனையாளர்கள் 9 நபர்கள் உட்பட மொத்தம் 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...