குடியரசு தினத்தன்று புதுதில்லியில் என்எஸ்எஸ் மாணவர் பேரணியில் பங்கேற்ற எஸ்என்ஆர் கல்லூரி மாணவருக்கு பாராட்டு


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மாணவர் எஸ்.ராகுல் இவ்வாண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி புதுதில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாப் பேரணியில் என்எஸ்எஸ் அணியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்று கல்லூரிக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் மட்டுமின்றி பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.



கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.ராகுல் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2015-யில் கோவை, எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் பி.காம்.சி.ஏ இளநிலை படிப்பில் சேர்ந்த இம்மாணவர் சமூகசேவையில் மிகுந்த ஆர்வம்கொண்டு என்எஸ்எஸ்-இல் இணைந்து சிறப்பாக செயல்பட்டார்.



மேலும், கல்லூரியில் நடைபெறும் என்எஸ்எஸ் பேரணிக்கான சிறப்புப் பயிற்சியில் மிகக்கடுமையாக பயிற்சிபெற்றார். 

தொடர்ந்து, பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான தேர்வில் ஏறத்தாழ 130 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் தேர்வான 3 மாணவர்களுள் ஒருவராக எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மாணவர் எஸ்.ராகுல் தேர்ச்சி பெற்று, பின் புதுதில்லியில் ஜனவரி 1 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் பெற்றார்.



இவரது இடைவிடாத முயற்சியின் பலனாக 2017-ஆம் ஆண்டின் புதுதில்லி குடியரசு தினவிழா பேரணியில் பாரதியார் பல்கலைக்கழத்தின் மாணவர் பிரதிநிதியாக பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

மாணவரின் இச்சாதனைக்கு கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், என்எஸ்எஸ் கல்லூரி திட்ட அலுவலர்கள், பெற்றோர்கள் அனைவரும் பக்கபலமாய் இருந்ததோடு வாழ்த்துகளையும் வழங்கியுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...