திருப்பூரில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

2023-ல் நடைபெறவுள்ள மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இதற்கு அரசு அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது, திருப்பூரில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் நடைபெறும்.

இதற்கு அனைத்து அரசு துறை அலுவலர்களும் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அலுவலகங்களிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வேலைவாய்ப்பு முகாம் சார்பில் பயிற்சி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கான வகுப்பில் மாணவர்களை சந்தித்தார்.



அப்போது அவர், ஒன்றிய அரசின் பணியிடங்களில் மூன்று சதவீத தமிழர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர், அதனை உயர்த்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் மாணவ மாணவிகளும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அரசின் சலுகைகளை பயன்படுத்தி ஒன்றிய அரசின் பணிகளுக்கு தகுதியானவர்களாக தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...