கோவை ராம்நகர் மண்டல் பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக ராம் நகர் மண்டல் பகுதியில் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான சிவசங்கரி கலந்து கொண்டார்.



இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...