உதகையில் நடைபெற்ற ‘மோற்ட்வர்த்’ திருவிழா - பாரம்பரிய உடையணிந்து தோடர் இன பழங்குடி மக்கள் உற்சாக நடனம்..!

உதகையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மந்து பகுதியில் பழங்குடியின மக்கள் நடத்திய ‘மோற்ட்வர்த்’ திருவிழாவில் தோடர் இன பழங்குடி மக்கள், பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் தோடர் பழங்குடியின மக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மந்து எனப்படும் 70 கிராமங்களில் வசித்து வருகின்றனர். தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் வாழ்ந்து வரும் இவர்கள் எருமைகளை வளர்த்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்கள் ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்து பகுதியில் அவர்களது பாரம்பரிய கோவில்களான கூம்பு வடிவிலான முன்போ மற்றும் அரைவட்ட வடிவிலான அடையாள் வேல் கோவில்களில் மொற்ட்வர்த் எனப்படும் பாரம்பரிய விழாவை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 70-க்கும் மேற்பட்ட மந்துகளில் இருந்த வந்திருந்த தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.



அப்போது கூம்பு வடிவ முன்போ கோயிலில் கூடிய தோடர் இன மக்கள் ஒருவருக்கு ஒரு ரூபாய் வீதம் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பின்பு அனைவரும் அரை வட்ட வடிவிலான அடையாள்வேல் கோவில் வந்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து, இரண்டு கோவில்கள் முன்பு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

இதனைதொடர்ந்து, இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தும் விதமாக இளவட்ட கல்லை தூக்கி திறமையை வெளிப்படுத்தினர். தோடர் இன மக்கள் 1500 பேர் மட்டுமே வாழ்த்து வரும் நிலையில் தங்களது குலம் மற்றும் எருமைகள் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி மொர்ட் வர்த் திருவிழாவை கொண்டாடி இறைவனை வழிபாடு நடத்தியது வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...