கோவை நீலாம்பூர் பகுதியில் அதிகாலை கோர விபத்து: காவல் ஆய்வாளரின் மகன் பரிதாபமாக பலி..!

இன்று அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியதில், காரில் பயணித்த ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.



கோவை நீலாம்பூர், கரையம்பாளையம் ஜங்ஷன் அருகே அதிகாலை நடந்த கோர விபத்தில், காவல் ஆய்வாளரின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் முருகாசலம். இவர் மகன் கார்த்தி (18), அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரும், இவரது 17 வயதுடைய நண்பரும் நேற்று காரில் பயணத்திருக்கின்றனர். அப்போது, கார்த்தியின் நண்பர் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியது. இதில், காரில் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும், காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைத்தனர்.

இதில், காவல் அனையாளரின் மகனான கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த கார்த்திக்கின் நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் எங்கிருந்து வந்தது? எதற்காக இங்கே அதிகாலை வேளையில் சென்றார்கள்? என விபத்தின் பின்னணி குறித்து போலீசார் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...