கோவையில் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு - இளைஞர் கைது….!

சிறுமுகை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற வசந்தகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (63). இவரது மனைவி சரோஜா (59). இருவரும் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்களின் படங்களை போலீசார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் வசந்தகுமார் என்பதும் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வசந்தமாரை கைது செய்த போலீசார் அவர் கொள்ளை அடித்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...