தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது!


தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது என அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

கோவையில் சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழ்நாடு தற்போது உள்ள நிலைபாட்டில் தகுதியான முதல்வர் இல்லாமல் இருக்கிறது. இதுப்பற்றி அதிமுக கட்சி கலந்து ஆலோசனை செய்யவேண்டும். தமிழக மக்கள் கடந்த 8 மாதங்களாக பெரும் பிரச்சனைகளை சந்தித்து  வருகின்றனர். முன்னாள் தமிழக முதலவர் மறைவில் மர்மம், மத்திய அரசின் 500, 1000 ரூபாய் செல்லாத அறிவிப்பு, ஜல்லிக்கட்டு, ஜாதி கலாவரம், கடலில் ரசாயனம் கலப்பு மற்றும் கொலை, கொள்ளை அதிகரிப்பு போன்ற இன்னல்களால் பொதுமக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை, சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

ஒருபக்கம் வறட்சியில் விவசாயிகள் தற்கொலை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார பாதிப்பினால் சாமானிய மக்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இதுபோன்ற சூழலில் தமிழக மக்களுக்கு தகுதியான முதல்வர் இல்லையென்றால் மக்களே இதற்கான தீர்வுகளை காண முற்படுவர். கூடிய விரைவில் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் நிலவும். தற்போது தமிழகம் உள்ள நிலைமையில் மதவாதம் இல்லாத அரசு உருவாக  வேண்டும், அதுவரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு அளிக்காது.

 இவ்வாறு, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அப்துல் காதர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...