கோவை சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு

நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 24 ஆம் தேதி குடும்பத்துடன் கோவை வந்த ரமேஷ், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.



இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகே வசித்து வரும் மகேஷ்வரி என்ற பெண், ரமேஷின் வீட்டுக்கே சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, ரமேஷூக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து கிளம்பி வந்த ரமேஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து

சிங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.



இதையடுத்து, கோவை விரைந்த ரமேஷ், வீட்டுக்குள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து, தடயவியல் துறையினர் அங்கு பதிவான 6 கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், 36 சவரன் தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...