கோவையில் டாஸ்மாக் பாரில் சப்ளையர் மீது தாக்குதல் - 7 பேர் கொண்ட கும்பல் கைது

தடாகம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், நண்பர்களுடன் சேர்ந்து பார் ஊழியரை தாக்கி விட்டு, பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாருக்கு, பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய இருவரும் மது குடிக்க வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், பாரில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சேர்மன்ராஜ் (28), இருவரையும் கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர்பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனர். பின்னர், பாரில் இருந்த மேஜை மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதை தடுக்க முற்பட்ட பார் சீனியர்களை மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார் (23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன் (31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...