கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்த மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான 15 நாள் வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் கலந்துகொண்டு பயிற்சி காவலர்களை பாராட்டினார்.



கோவை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



15 நாட்கள் நடைபெறும் இந்த பயற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல், லத்தி, கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணி வகுப்பு கவாத்து, கைதி வழிக்காவல் பணி, பண வழிகாவல் பணி, காப்புபணி, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணி ஆகிய பணியின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, மன அழுத்தம் கையாளுதல், உடல் நலம் பேணுதல், ஆரோக்கிய உணவு முறை, ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.



இந்த பயிற்சியின் நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பயிற்சி முடித்த காவலர்களின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதையடுத்து மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதபடை துணை ஆணையர் முரளிதரன், உதவி ஆணையர் சேகர், ஆய்வாளர்கள் கோவிந்தராஜூ, பிரதாப்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...