தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டி - வெண்கல பதக்கம் வென்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சைக்கிள் போலோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளையோர் பெண்களுக்கான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த சட்டீஸ்கர் மாநிலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.



அதேபோல், இரண்டாவதாக வந்த மேற்கு வங்க மாநிலம் வெள்ளி பதக்கத்தை வென்ற நிலையில், தமிழ்நாடு வெண்கல பதக்கத்தை வென்றது. இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பதக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...