பல்லடம் அருகே 1.5 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம் - மீட்டுத்தர கோரி பொதுமக்கள் மனு

பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான மயானம் மற்றும் குட்டை நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி பொதுமக்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கோதிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சங்கோதிபாளையம் பகுதியில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் மயானம் மற்றும் குட்டை நிலம் அமைந்துள்ளது. இந்நிலையில், அரசு குட்டையை புனரமைத்து மழை காலங்களில் குட்டையில் தண்ணீர் தேங்கும் வண்ணம் சிறு தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக தனியார் நிறுவனம் (ஹார்வெஸ்ட் பம்ப்) ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.



இதனிடையே அந்த தனியார் நிறுவனத்தின் வழித்தடத்திற்கு அரசு மயானம் மற்றும் குட்டை நிலத்தை மணல் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.



மேலும் குட்டையில் இருந்த மரங்களை அகற்றியும், தடுப்பணையை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர், பல்லடம் தாசில்தார் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனர். அவர்கள் தங்களது மனுவில், அரசுக்கு சொந்தமான 1.5 கோடி மதிப்பிலான நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளது என்றும், அதனை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நிலத்தை மீட்டு தராத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...