கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் அகற்றம் - பரபரப்பு

கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் பெயர் பலகையில் இருந்த எஸ்.பி.வேலுமணியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியால் திறந்து வைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் பொறிக்கப்பட்ட இடம் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, 90வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள், குலசேகரன், மற்றும் மதனகோபால் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளரிடம் உடனடியாக பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் எழுத்துப்பூர்வமாக அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை திமுகவினர் யாரேனும் தான் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சட்டமன்ற தொகுதியில் திறந்து வைத்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது என்றாலும் தற்போது திமுக ஆட்சியிலும் அவரே அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவ்வாறு இருக்க இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்தவர்கள் யார் என அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...