வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி - தாராபுரம் இளைஞர் கைது செய்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


கோவை: திருப்பூர் மாவட்டர் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35). இவர், குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக தனது யுடியூப் பக்கத்தில் பல்வேறு விளம்பரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விளம்பரங்களை நம்பிய கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டித் தரும்படி கூறி, முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை உதயகுமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உதயகுமார் செட்டிபாளையத்தில் உள்ள ஆஷாவின் காலி இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான முதற்கட்ட வேலைகளை மட்டும் செய்துவிட்டு, வீட்டை கட்டி முடிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது சம்மந்தமாக, பாதிக்கபட்ட பெண் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதேபோல் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதயகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...