சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.152 உயர்வு - 41,000-ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, சவரன் ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தொடர்ந்து 40,000 ரூபாயை கடந்து தங்கம் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த அக்டோபரில் 40 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இதனிடையே இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.152 உயர்ந்து ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.74.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை தொடர்ந்து 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால், இனிமேல் அதை வாங்க முடியுமா? என பலரும் அச்சம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...