கோவையில் ஜன.1 முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஊதியம் - மாமன்றத்தில் தீர்மானம்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதியமாக ரூ.648.33 வழங்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே ஊதியமாக ரூ.440 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.721 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்றும், அவர்களது நலனை கருத்தில் கொண்டும் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்து வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.648.33 ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வானது, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...