கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர் சமீரன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், கோவையில் ஆட்சியர் சமீரன், 893 சுய உதவி குழுக்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


கோவை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.



மேலும் அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை விருதுகள் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 893 சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.



இந்நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அதன்படி, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன், சுய வேலைவாய்ப்பு திட்டம், சமுதாயத்திறன் பள்ளிகள் அமைப்பதற்கு நிதி, சமுதாயப் பண்ணை பள்ளிகள் அமைப்பதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 893 சுய உதவி குழுக்களுக்கு 58.004 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 2704 பயனாளிகள் பயன் பெற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...