பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கோவை பாஜகவினர் தீபங்கள் ஏற்றி அஞ்சலி..!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று உடல்நலம் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த அஞ்சலி நிகழ்விற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி பிரதமர் மோடியின் தாயார் படத்தை ஓவியமாக வரைந்திருந்தார்.



அந்த ஓவியத்தை சுற்றிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் தாயார் 100வது வயதில் இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு, பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் மோடி மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரதமரின் தாயார் கடுமையான வாழ்க்கை பின்னணிகளை சந்தித்து, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உன்னத தலைவரை நாட்டிற்காக கொடுத்து மிகப்பெரிய உத்வேகத்தை அவருக்கு அளித்து தவ வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக, தெரிவித்தார்.

மேலும், இந்திய பெண்கள் அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு, இவரது வாழ்க்கை உத்வேகமாக உள்ளது எனவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மூலமாக உயர்ந்த தலைவர்களை தவப்புதல்வர்களை கொடுக்க முடியும் என்பதற்கான உதாரணமாக இவரது வாழ்க்கையை பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், இரங்கல் தெரிவித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.



சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சங்கர் என்பவர் வரைந்த பிரதமரின் தாயார் ஓவியம் குறித்து பேசிய அவர், தெற்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக அணுகிய பொழுது அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன், பிரதமரின் தாயார் ஓவியத்தை வரைந்த அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...