அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' துவக்கம்


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' என்னும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 10, 11) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது



யுகம் 2017-இல் கலை மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள், பயிலரங்கம் மற்றும் பலவற்றுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையாக அமையும். இந்நிகழ்ச்சியில் இந்த வருடம் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.



அறிவு சார்ந்த மற்றும் பயிலரங்கம் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள். இந்த வருடத்துக்கான கருப்பொருள் "பெண்களின் முன்னேற்றம்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். 



மேலும், இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.மகாலிங்கம் தென் இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களின் முன்னேற்றத்தைப் குறித்து மீரா எர்டா, ஷெபாலி தாதாபாய் மற்றும் நீபா நம்பூதிரி ஆகியோர் தங்களின் தூண்டுதல் மற்றும் தடைகளைப் பற்றி மாணவியர்களிடம் பகிர்ந்தனர்.



ஹீரோஸ் அன்லிமிடெட் என்ற தலைப்பில் அண்ணாதுரை, மூர்த்தி மேகவன், சேகர், பாலாஜி மற்றும் ஹரிஹரன் போன்ற சாதனையாளர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்தனர்.



நீர் ஏவுகணைக்கான போட்டி, ரோபோகளுக்கான கால்பந்து போட்டி, ரேடியோவால் இயக்கப்படும் ஐசி என்ஜின் பந்தய போட்டி, காகிதத்தால் ஆடை அலங்காரம் செய்யும் போட்டி, மற்றும் பல போட்டிகள் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...