புத்தாண்டு கொண்டாட்டம்: இரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை - திருப்பூர் மாநகர காவல் ஆணையர்

2022 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளை திருப்பூர் மாநகர காவல்துறையினர் சிறப்பாக கையாண்டுள்ளனர் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



மேலும், குண்டர் தடுப்புச் சட்டம், கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழிப்பறி வழக்குகள், கஞ்சா விற்பனை குட்கா விற்பனை, லாட்டரி விற்பனை சூதாட்டம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு என அனைத்து வழக்குகளையும், திருப்பூர் மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் பெருமிதம் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும் புத்தாண்டு இரவில் வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை மூலமாக அதிவேக பயணம் குறைந்து புத்தாண்டு போன்ற நன்னாளில் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...