திருப்பூர் திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய காவல்நிலையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக காவல்நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.



இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மட்டும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், மாநகர துணை காவல் ஆணையர்கள், அபினவ் குமார், வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...