சிக்கிமில் பணியின் போது வீரமரணம் அடைந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு ஆட்சியர் சமீரன் அஞ்சலி

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் மைக்கேல் சாமியின் உடல் கோவை வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து, தொடர் சிகிச்சையில் இருந்த கோவை மாவட்டம் காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைக்கேல்சாமி என்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மைக்கேல்சாமி இறுதியாக மேற்கு திரிபுரா மாநிலம் கோர்கா ரைபில்ஸ் ரெஜிமென்டில் பணியாற்றி வந்தார். விபத்தில் சிக்கிய மைக்கேல்சாமி உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் ராணுவ விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது.



கோவை விமான நிலையம் வந்தடைந்த மைக்கேல் சாமியின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இதையடுத்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...