கோவையில் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ஐடி ஊழியர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே தனியார் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐ.டி ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வேலப்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சண்முகா சாலையில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முத்து குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமார் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் (23) என்பதும், பி.பி.ஏ பட்டதாரியான இவர், ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...