கோவையில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் புகார் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அ.தி.மு.க கட்சியில் மாநகராட்சி 52-வது பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தரக்கோரி, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது தொலைபேசி எண்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.

இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராக இருப்பதாகவும், அ.தி.மு.க தொண்டர்களின் முழு ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...