கோவை விழா: கோவையில் நடைபெற்ற இசையுடன் கூடிய கண்கவர் லேசர் ஷோ நிகழ்ச்சி

இன்று மாலை கோவை வாலாங்குளத்தில் இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.



கோவை: ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் கோவை விழா, வரும் 4-8 ஆம் தேதி முதல் கொண்டாப்படவுள்ளது.



இவ்வாண்டு, 15 வது கோவை விழாவை முன்னிட்டு இன்று இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.



கடந்த நவம்பர் 24ஆம் தேதி கோவை விழாவை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த வருடம் 15 வது கோவை விழாவை முன்னிட்டு, 15 சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், மாரத்தான், அறிவியல் விழாக்கள், ஹேக்கத்தான்கள், இசை நிகழ்ச்சிகள், கலை அமர்வுகள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் ஆகியவை அடங்கும்.



நாளை மறு நாள் நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில், இன்று மாலை கோவை வாலாங்குளத்தில் இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்வில், பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் கிராமத்தில் நடைபெறும் திருவிழா போலவே, மாநகர் பகுதிகளில் கோவை விழா நடைபெறுவதாக தெரிவித்தார்.

அனைத்து கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை விழாவில் இடம் பெற உள்ளதாகவும், அதில் குறிப்பாக கார் கண்காட்சி, விவசாய கண்காட்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



பின்னர் நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியில் கண்கவர் வண்ண லேசர் விளக்குகள் இசைக்கேற்றவாறு பிரதிபலித்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கோவை விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ட்ரீட் ஆர்ட் நிகழ்ச்சியில், 70 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் நிகழ்ச்சி பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளமாக இருக்கும், என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அக்ரி நெக்ஸ்ட், கார் பேரணி, செஃப்ஸ் பிளேட், தி பிட்ச், பாரா ஸ்போர்ட்ஸ் மற்றும் இசை மழை ஆகியவை இந்த வருடம் திட்டமிடப்பட்ட மற்ற நிகழ்வுகள் ஆகும்.





Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...