கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று இயக்குநரகம், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதுடில்லி, மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் தேசப்பற்றுத் திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி கலந்து கொண்டு தேசப்பற்று திரைப்பட விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியானது இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒவ்வொறு நாளும் காலை 10, மதியம் 1, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் மூன்று காட்சிகள் வீதம் 9 தேசப்பற்று திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிடப்படுகிறது.
தேசப்பற்று மிகுந்த இத்திரைப்படங்களை மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டுமென துணை இயக்குநர் (செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்) பிரசாந்த்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.