பல்லடம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபரை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை உள்ளது.

இந்த கடை முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு விஜயன் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.



அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.



இதுகுறித்து விஜயன் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் மர்மநபரை தேடி வருகின்றனர். தற்போது இந்த திருட்டு சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...